சவூதியில் குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை, இந்தோனேஷிய பணிப்பெண்கள் கைது

Read Time:1 Minute, 15 Second

arrested womenகுழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தோனேஷிய பணிப்பெண்கள் இருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூரான ஆயுதத்தால் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளதாக இந்த இரண்டு நாட்டுப் பணிப் பெண்கள் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து சவூதி அரேபிய தூதரகத்தினால் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள இருநாட்டுப் பணிப்பெண்களிடமும் சவூதி அரேபிய பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதிப் பொது முகாமையாளர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த, குழந்தையை காப்பற்றிய வீரர்..
Next post திருகோணமலையில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு