அமெரிக்காவில் சிறுமியை சிறை வைத்து, 10 வருடம் கற்பழித்த கொடூரன்..

Read Time:1 Minute, 56 Second

rape 3அமெரிக்காவில் கடத்தி சிறை வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட சிறுமி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டாள்.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற 15 வயது சிறுமியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடத்தினார்.

பின்னர், அவளை ஒரு தனிமை சிறையில் அடைத்து வைத்தார். சிறுமி லாராவின் தாயாருடன் அவர் காதலராக சேர்ந்து வாழ்ந்தபோது அவளை கடத்தி சென்றார்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு லாராவை கலிபோர்னியா போலீசார் மீட்டனர். பேஸ்புக் மூலம் தனது சகோதரியுடன் தொடர்பு கொண்ட லாரா தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

அதாவது, கடத்தி சிறை வைக்கப்பட்ட லாராவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கார்சியா வற்புறுத்தி வந்தார். அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். மேலும் அவளை பலமுறை கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் காரணமாக அவளுக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. பலமுறை தப்பிக்க முயன்றும் தன்னால் முடியவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்தது. அதை தொடர்ந்து கார்சியா கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இசைஞானி இசையில் பவர் ஸ்டார்
Next post ரஜினி கட்–அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்: பட்டாசு வெடித்தனர்..