சிறைக்குச் சென்றவர் கைது..
Read Time:1 Minute, 6 Second
மாத்தளை மாவட்டம் தம்புள்ள காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவருக்கு போதை பொருள் கொண்டுச் சென்ற ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், போதை பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிறையில் இருப்பவர் தமது நண்பர் என கூறிக்கொண்டு இன்று மதியம் வந்தவரிடம் இருந்தே இவ்வாறு போதை பொருள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனது.
Average Rating