புலி உறுப்பினர்கள் மூவரும், இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைப்பு…!!
புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைதான மூன்று சந்தேகநபர்களும் இலங்கை பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தொடர்புகள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான முயற்சிகளில் இந்த மூன்று சந்தேகநபர்களும் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் மலேசியாவில் வைத்து கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.
அந்த மூன்று உறுப்பினர்களும் நேற்றிரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை பயங்கரவாத புலயனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Average Rating