மனைவியின் கையை துண்டித்த கணவருக்கு சரீர பிணை..
Read Time:1 Minute, 23 Second
மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவரை குருணாகல் நீதிமன்ற நீதிவான் 2,40 000 ரூபா பிணையில் விடுதலை செய்துள்ளார்.
குருணாகல் பமுது கெதரையைச் சேர்ந்த ஜயநாத் நாகவன்ன என்பவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரம் கொண்ட கணவர் கத்தியினால் மனைவியின் இடது கையை இரண்டாக வெட்டியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிசார் அவரை நீதவான் ரவீந்திர பிரேமரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவ்வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிவான் ரவீந்திர பிரேமரட்ண குறித்த நபரை 40,000 ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாவிற்கான இருவரின் சரீரப் பிணையிலும் விடுதலை செய்துள்ளார்.
Average Rating