பெண் அபிவிருத்தி அதிகாரி கழுத்து அறுத்துக் கொலை!

Read Time:1 Minute, 33 Second

knife-02சீதாவக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி அதிகாரியான பெண்ணொருவரை தந்தைக்கு முன்னால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரண மட்டுவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே கொலை செய்யப்பட்டவராவார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பஸ் சாரதியுடன் பஸ் உரிமையாளர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதியொருவரையும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இப்பெண்ணுக்கும் பஸ் சாரதிக்குமிடையே அடிக்கடி சச்சரவு ஏற்பட்டுள்ளதால் இப்பெண் தந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் ஏனைய இரண்டு நபர்களுடன் இப்பெண்ணை மீண்டும் அழை-த்துச் செல்ல அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பெண் மீண்டும் அந்த நபருடன் செல்ல மறுத்தபோதே அந்த நபர் இவ்வாறு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் கையை துண்டித்த கணவருக்கு சரீர பிணை..
Next post எதிரிகளால் வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களே மீட்பு