ஆவியை விரட்டுவதற்கு முயற்சித்ததில் பெண் பலி
Read Time:1 Minute, 6 Second
பெண் ஒருவரது சரீரத்தினுள் உட்புகுந்திருந்ததாகக் கூறப் படும் இறந்த ஒருவரது ஆவியை விரட்டுவதற்கு பூசாரி ஒருவர் முயற்சித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பொல்பிதிகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
44 வயதுடைய தம்மிகா திசாநாயக என்ற பெண்ணே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
மேற்படி பெண்ணிடம் குடி கொண்டுள்ள ஆவியை விரட்டுவதற்கு பூசாரி ஆவேசமடைந்த நிலையில் தென்னைமரப் பூவால் அடித்து விரட்ட முற்பட்ட போதே அப் பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating