மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை கைது..
வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் கூறியதை நம்பி, மாணவியை நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சித்தி உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு – திருச்சி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனுடன் தொடர்புடைய சாமியார் உள்பட 7 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அடுத்த கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42).
இவரது முதல் மனைவி இறந்து விட்டார். ரவிச்சந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த ராணி (40) என்பவரை 2 ஆவது திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவிக்கு சங்கீதா, பானுப்பிரியா (16) என இரு மகள்கள் உள்ளனர். சங்கீதாவுக்கு திருமணமாகிவிட்டது. பானுப்பிரியா தற்போது, 12ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.
கோடை விடுமுறைக்காக பானுப்பிரியா ஈரோட்டில் உள்ள தனது மாமா வீட்டிற்குச் சென்றிருந்தார்.
இதன்போது, வீட்டின் மையத்தில் ஒரு ஆள் உயரத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. 55 வயதுள்ள பூசாரி ஒருவர் மந்திரம் சொல்ல, 6 இளைஞர்கள் குடிபோதையில் அமர்ந்து அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.
ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த பானுப்பிரியா அங்கிருந்து தப்பி ஓடி, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியையின் கணவரிடம் சென்று, தனது வீட்டில் நடப்பதைக் கூறினார்.
அவர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் போது, புதையல் எடுக்கும் விதமாக மாணவியைப் பலிகொடுக்கும் திட்டம் தீட்டப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
Average Rating