13வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறுவன் உடல் இந்தியா வருகிறது
Read Time:1 Minute, 21 Second
இந்தியாவை சேர்ந்த ஜோசப் என்பவர் சார்ஜா நாட்டில் என்ஜினீயர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் இங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதியர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் சார்ஜா கலை அருங்காட்சியகம் அமைந்துள்ள அல்{வைஹீன் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் 13வது மாடியில் வசித்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை, கடைசி குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றி வழியனுப்பி வைக்க ஜோசப்பின் மனைவி கீழே சென்றார். தூக்கம் கலைந்து விழித்த மூத்த மகன் கெவின்(7), மாடியின் பால்கனி வழியாக கீழே எட்டிப் பார்த்தபோது, கால் தவறி கீழே விழுந்து, ரத்த வெள்ளத்தில் பலியானான்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் மற்றும் அடக்கத்துக்காக அவனது உடல் இன்று இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.
Average Rating