ஆபாச ஸ்டில் புகார் எதிரொலி, பட அதிபர்கள் எதிர்ப்பு: ஸ்ருதிஹாசன் பல்டி!!

Read Time:2 Minute, 42 Second

003nஆபாச ஸ்டில் புகார் விஷயத்தில் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பால் பின்வாங்குகிறார் ஸ்ருதி. டோலிவுட் படமொன்றில் ஸ்ருதிஹாசன் நடித்த பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

டாப்லெஸ் என்று கூறும் அளவுக்கு ஆபாசமாக இருந்ததையடுத்து ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஐதராபாத் போலீசில் புகார் செய்தார். தனது ஸ்டில்களை ஆபாசமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து போலீசார், ஒரு சில சினிமா போட்டோகிராபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரே பட புரமோஷனுக்காக இந்த ஸ்டில்களை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ருதியின் இந்த நடவடிக்கை டோலிவுட் தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகினருக்குள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்னையை போலீஸ் வரை கொண்டு சென்றுவிட்டாரே என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஸ்ருதியை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு தயக்கம் காட்டினார்கள். இதையறிந்த ஸ்ருதி தற்போது தனது வேகத்தை குறைத்துக்கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது, குறிப்பிட்ட பாடலுக்கு ஆடும்போது எடுத்த ஸ்டில்களை வெளியிடக்கூடாது என்று கேட்டபோது சரி என்று உறுதியளித்தனர்.

அதை நம்பினேன். இப்போது எல்லா படங்களையும் வெளியிட்டுவிட்டனர். சினிமாவில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். இனிமேல் நல்லவர்கள் மீதும் நல்ல விஷயங்கள் மீதும் என் கவனத்தை செலுத்தப்போகிறேன். இப்போதைக்கு இப்பிரச்னையிலிருந்து வெளியில் வர விரும்புகிறேன். யாரையும் தண்டிக்கும் எண்ணம் எனக்கில்லை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) கடலாமைக் குஞ்சுகளை கடலுக்கு விடும் ஜனாதிபதி
Next post பாஸ்போர்ட்டில் படங்கள் வரைந்த மகன்; நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தந்தை