தலையில் கல் விழுந்து ஒருவர் பலி
Read Time:53 Second
பதுளை, எல்ல பிரதேசத்தில் கல்குவாரி ஒன்றின் தொழிலாளர்கள் மீது கல் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் உட்பட பிறிதொரு நபர் குறித்த கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது கல் வீழ்ந்துள்ளது.
இதன்போது இருவரும் படுகாயமடைந்து தேமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேமோதர பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating