முல்லைத்தீவில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
Read Time:1 Minute, 1 Second
முல்லைத்தீவு முள்ளியவளை கேபாபிலவு பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கேபாபிலவிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட மோதலின்போது குறித்த இருவரும் கத்திக் குத்துக்கு இலக்கானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடும் காயங்களுடன் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating