நாயால் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்ட விமானம்

Read Time:1 Minute, 27 Second

002gஅமெரிக்க எயார்வேய்ஸ் விமானமொன்றில் பயணித்த நாயொன்று விமான நடை பாதையில் இரு தடவைகள் மலம் கழித்ததால் அந்த விமானம் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து பிலடெல்பியாவுக்கு பயணித்த பயணிகள் விமானத்தில் பயணித்த மேற்படி நாய்க்கு திடீரென வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாயால் கழிக்கப்பட்ட மலத்தை விமான ஊழியர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் அகற்றியுள்ளனர்.
நாயின் மலத்திலிருந்து வெளிப்பட்ட துர்நாற்றத்தால் பயணிகள் ஏற்கனவே திணறிக் கொண்டிருக்க அந்நாய் இரண்டாவது தடவையாகவும் மலம் கழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த விமானம் மிஸோரி மாநிலத்திலுள்ள கன்ஸாஸ் நகரில் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டது.

அங்கு அந்த விமானம் சுத்திகரிக்கப்பட்டதையடுத்து பிலெடெல்பியாவை நோக்கி மீளவும் அது பயணத்தை தொடர்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைத்தீவில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
Next post விஜய்யுடன் ஜோடி சேரும் ஹன்சிகா