10 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த 17 வயது வாலிபர் கைது
10 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயது வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ – சிறிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுவனின் விட்டுக்கு அயலில் வசிப்பவர் எனத் தெரியவந்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் குறித்த சிறுவன் பாடசாலை விட்டு வந்துகொண்டிருந்த போது, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தனக்கு நடந்த இந்த சம்பவத்தை சிறுவன் தனது நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளார்.
அவர்களில் ஒருவரின் மூலமாக இதனைத் தெரிந்துகொண்ட நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய்க்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
தற்போது பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக மாரவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating