பாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய்

Read Time:1 Minute, 40 Second

rape-oldwomanமது போதையில் தனது பாட்டியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்துக்குட்படுத்தி தப்பியோடிய இராணுவ சிப்பாய் ஒருவரை மொனராகலை பகுதியின் தம்பகல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தம்பகல்லை கங்கொடகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வயோதிபப் பெண் தனிமையில் இருந்தவேளையில் வீட்டிற்குள் நுழைந்த இராணுவ சிப்பாயான பேரன் அவர் மீது பாலியல் வல்லுறவினை மேற்கொண்டுள்ளான்.

அதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி கூக்குரலிடவே பேரன் தப்பியோடியுள்ளான்.

கூக்குரல் சத்தத்தைக் கேட்டு அங்கு கூடியவர்கள் தப்பியோடிய நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர் விடுமுறையில் வீடு வந்தவரென்றும் தனது தாயின் தாயையே மதுவெறியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளாரென்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட வயோதிபப்பெண் 83 வயதுடையவர் என்பதும் அவரது பேரனான இராணுவ சிப்பாய் 30 வயதுடையவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘இராணுவத்தை வெளியேற்றி, வடக்கில் மீண்டும் புலிகளை உருவாக்கவே விக்னேஸ்வரன் முயற்சி’
Next post கடத்தப்பட்ட பாதிரியார், இலங்கை அகதிகளுக்கும் உதவியவர் -தந்தை