மாஜி பாய் பிரண்டுக்கு, பிரியங்கா நோட்டீஸ்..
ரகசிய காதலை அம்பலப்படுத்துவதற்காக படம் எடுத்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று தனது மாஜி பாய் பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பிரியங்கா சோப்ரா.
கடந்த 2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வு ஆனார். அப்போது அவரது பாய்பிரண்ட்டாக இருந்தவர் அசீம் மர்சன்ட்.
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் அசீம் தனது வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாரிக்கப்போவதாக அறிவித்தார்.
இதையறிந்து ஷாக் ஆன பிரியங்கா, வக்கீல் ஆனந்த தேசாய் மூலமாக மாஜி பாய்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், பிரியங்காவின் சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கையை மையமாக வைத்தே இப்படத்தை அசீம் தயாரிக்கப் போவதாக தெரிய வருகிறது. இது பிரியங்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அவரது தனிப்பட்ட உரிமையை பாதிப்பதாக உள்ளதுடன் அவரது மதிப்பை குறைக்கும் வகையிலும் இருக்கிறது. தன் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க யாருக்கும் அவர் உரிமை தரவில்லை.
எனவே இதுதொடர்பான ஸ்கிரிப்ட் முழுவதையும் அசீம், பிரியங்காவிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசீம் கூறும்போது, இதுதொடர்பாக பிரியங்காவிடம் பேச தயாராக உள்ளேன். அதன் பிறகும் அவர் எதிர்ப்பு தெரிவித்தால் படத்தை கைவிட தயார்.
யாருடைய உணர்வையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. இப்படம் என்னைப் பற்றியது தான். இதில் ஒரு பகுதியில்தான் பிரியங்காவுடனான எனது நட்பு பற்றி இருக்கும் என்றார்.
Average Rating