அமெரிக்காவில் சக மாணவியை கொலை செய்ய முயன்ற 2 மாணவிகள் கைது

Read Time:2 Minute, 56 Second

276f7338-050c-4903-960e-3a8634a68a30_S_secvpfஇணையதளத்தில் திகில் தொடர் ஒன்றைப் பார்க்க நேரிட்ட 12 வயதுடைய பள்ளி மாணவிகள் இருவர் அதே முறையில் தங்களுடன் படிக்கும் சக மாணவி ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

இதன் விளைவாக தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சம்பவத்தின் விபரீதத் தன்மையினால் “பெரியவர்கள் மீதான கொலைக் குற்றம்” இந்த சிறுமிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த 12 வயது பெண் ஒருவர் கடந்த வாரம் ஒரு திகில் தொடரைப் பார்த்துள்ளாள். அதில் வருவது போன்ற கொலை சம்பவத்தினை நேரில் நடத்த விருப்பப்பட்ட அவர் தன்னுடன் படிக்கும் சக மாணவியையும் தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளாள்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர்களுடன் படிக்கும் மற்றொரு மாணவி உட்பட மூவரும் மில்வாக்கியில் உள்ள ஒரே வீட்டில் ஒன்றாக தூங்கியுள்ளனர். மறுநாள் சனிக்கிழமை காலை அங்கிருந்து 20 மைல் மேற்கே உள்ள பூங்காவில் அவர்கள் விளையாட சென்றனர்.

அப்போது திட்டமிட்டபடி ஒரு பெண் புதிதாக வந்தவளைப் பிடித்துக் கொள்ள, கொலை செய்ய திட்டமிட்ட மற்றொரு பெண் 5 அங்குல நீளமுள்ள கத்தி ஒன்றினால் அவளை கால்கள், கைகள், உடல்பகுதி என்று 19 முறை குத்தியுள்ளாள் என்று கூறப்படுகின்றது.

முக்கிய உறுப்புகள் சேதமடைந்த போதும் காயம்பட்ட அந்தப் பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பி வெளியே வந்து சைக்கிளில் வந்த வழிப்போக்கர் ஒருவரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறிவரும் இந்த பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு சிறுமிகளும் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சிறுமிகளாக இருந்தபோதும், நடந்த சம்பவத்தின் பயங்கரம் கருதி இவர்கள் மீது பெரியவர்களுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வக்கேஷா கவுண்டி சர்க்யூட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமல்ஹாசனுக்கு போட்டியாக 12 கெட்அப்பில் வித்யா பாலன்..
Next post மாஜி பாய் பிரண்டுக்கு, பிரியங்கா நோட்டீஸ்..