ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தியவருக்கு சிறை

Read Time:1 Minute, 29 Second

homosexமனநிலை பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்திய யாழ். கொடிகாமம் பாலாவிப் பகுதியினைச் சேர்ந்த நபரொருவருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று உத்தரவிட்டார்.

மேற்படி நபர் கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அதேயிடத்தினைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை பாலாவி பகுதியிலுள்ள பற்றைக்குள் வைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியிருந்தார்.

தொடர்ந்து மேற்படி நபரை கைது செய்த கொடிகாமம் பொலிஸார், குறித்த நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபர் தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டதினையடுத்து நீதவான் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பளிக்க சென்ற பொலிசாரை, அடிக்கப் போன “மண்டையன் குழு” தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன்!! (அதிர்ச்சி வீடியோ & படங்கள்)
Next post மஹிந்த-மோடி சரியான ஜோடி அது ஜாடிக்கேற்ற மூடி: சபையில் அஸ்வர்