மரண வீட்டுக்கு சென்ற வேன் விபத்து: ஒருவர் பலி, 10 பேர் காயம்

Read Time:1 Minute, 26 Second

1000181380Untitled-1பதுளை – கொழும்பு பிரதான வீதியின் லேல்லுபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பெல்மடுல்லவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பவுச்சர் ஒன்று அதற்கு எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மரணவீடு ஒன்றிற்காக கிரில்லவலவில் இருந்து எமிபிலிபிடிய நோக்கி சென்றுகொண்டிருந்த குழுவினரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் விபத்தில் கிரில்லவெல பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒருவரே பலியாகியுள்ளார்.

வேன் சாரதி, ஏழு பெண்கள் உள்ளிட்ட 10 பேர் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பத்துடன் தொடர்புடைய பவுச்சர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23பேர் பலி
Next post இலங்கை தமிழரின் காணாமல் போன மகன், சென்னையில் மீட்பு