லண்டன்: மருமகளுக்கு கத்திக்குத்து; இந்தியருக்கு 10 ஆண்டு சிறை

Read Time:1 Minute, 49 Second

arrest12நடத்தையில் சந்தேகப்பட்டு மருமகளை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இந்தியருக்கு லண்டன் நீதி மன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.

வடகிழக்கு லண்டனில் வசிக்கும் இந்தியரான மஞ்சித் சிங் மிரிகிண்ட், தனது மருமகள் வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு, அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மஞ்சித் சிங் மிரிகிண்ட், மருமகள் ஜகீர் மிரிகிண்டை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார்.

ஜகீரின் குழந்தைகள் பதறிப்போய் கூச்சலிடுவதையும் பொருட்படுத்தாமல் அவர் நடத்திய ஆவேச தாக்குதலில் முகம் மற்றும் கையில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் சில நாட்களுக்கு பின்னர் நலமடைந்து வீடு திரும்பினார்.

இது தொடர்பாக ஸ்னேர்ஸ்ப்ரூக் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில், தேவையற்ற சந்தேகத்தால் ஈவிரக்கமின்றி கொடூரமான முறையில் மருமகளை கொல்ல முயன்ற குற்றவாளி மஞ்சித் சிங் மிரிகிண்டுக்கு 10 ஆண்டு 8 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடற்பயிற்சியில் ஈடுபடும் பராக் ஒபாமாவின் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி!
Next post ஆஸி. கிரிக்கெட்டைக் கலக்கும் இலங்கை அகதிகள்