பதினொரு பெண்களை திருமணம் செய்த நபர்
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்து புலன் விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளையில் அந்நபர் சட்டவிரோதமான முறையில் பதினொரு பெண்களை திருமணம் செய்திருந்தமை தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் மகியங்கனை புறநகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைந்திருப்பதாக மகியங்கனைப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றின் பேரிலேயே குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது சட்டவிரோதமான முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளமையையடுத்து அந்நபர் மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி கீதானி விஜயசிங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி அந்நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் மாத்தறை தொடகம பகுதியைச் சேர்ந்த ஏ.பி.அதபத்து என்று தெரிவித்த மகியங்கனைப் பொலிஸார் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றத்தில் பலமுறை ஆஜராகாமையினால் குறிப்பிட்ட நபருக்கு பிடி விறாந்து விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating