மக்களுக்கு வெறுப்பு – அலுகோசுவாவை மாற்ற முடிவு….!!
மரண தண்டனையை நிறைவேற்றும் தூக்குத் தூக்கிகளுக்கு சிங்களத்தில் தற்போது வழக்கில் இருக்கும் ´´அலுகோசுவா´´ என்ற பெயரை மாற்றப் போவதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், சந்திரசிறி பல்லேகம இதற்காக பொதுமக்களிடன் இருந்து சுமார் 200 புதிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த இறுதி முடிவை சிறைச்சாலைகள் அமைச்சு எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளையர் ஆட்சியின் போது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த ´´அலுகோசுவா´´ என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்ததாகவும், ஆனால், அந்தப் பெயர் குறித்து பொதுமக்கள் மட்டத்தில் ஒரு வெறுப்புணர்வு வளர்ந்துள்ளதால், எவரும் அந்தப் பதவிக்கான ஆட்சேர்ப்பின் போது , விண்ணப்பிக்க முன்வருவதில்லை என்றும் அவர் கூறினார்.
ஆகவே இந்தப் பெயரை மாற்றிவிட்டு, அதற்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் அவர் கூறினார்.
Average Rating