சிம்புவிடம் மன்னிப்புக் கேட்டார் சௌந்தர்யா!
Read Time:1 Minute, 18 Second
சிம்புவைத் தேடி எப்போதும் பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை இவரை வம்புக்கு இழுத்தவர் ரஜினியின் மகள் மற்றும் கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா தான்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளார் ‘ நீங்கள் சிம்புவிடம் ஒன்றை நிறுத்த சொல்ல வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள்’ என்று கேட்டதற்கு ‘இனி தயவு செய்து பாடாதே என்று சொல்வேன்’ என்று கூறினார்.
இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் மிகவும் கோபத்துடன் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
பின் நிலைமையை புரிந்து கொண்ட சௌந்தர்யா ‘ நாங்கள் இருவரும் சிறு வயதிலிருந்து நல்ல நண்பர்கள், நான் விளையாட்டுக்கு தான் அப்படி கூறினேன், உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
Average Rating