அளுத்கம சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு, உறுதிப்படுத்தினார் பொலிஸ் மாஅதிபர்
Read Time:52 Second
அளுத்கம பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வன்முறை சம்பவத்தின் போது பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அது வெறும் வதந்தி எனவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் மாஅதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
Average Rating