தாயை கொல்ல முயன்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை

Read Time:2 Minute, 2 Second

006eகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடக்கரையைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 55). இவரது மனைவி சாந்தா. இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் பிரசாந்த் (29). குடிப்பழக்கம் உள்ள பிரசாந்த் சரியாக வேலைக்கு செல்வதில்லை.

இந்த நிலையில் வீட்டுக்கு குடிபோதையில் வந்த பிரசாந்த் தனது தாயாரிடம் குடிக்க பணம் கொடு என்று கேட்டு தகராறு செய்தார்.

அவர் ‘பணம் ஏதும் இல்லை. ஒழுக்கமாக வாழும் வழியைப்பார்’ என்று கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து சாந்தாவின் தலையில் தாக்கி கொல்ல முயன்றார். இதைப்பார்த்த ரவீந்திரன் ஆத்திரமடைந்தார்.

குடிகார மகன் நமக்கு தேவையில்லை என நினைத்த அவர் மிகவும் ஆவேசமானார். சுத்தியலை பிடுங்கிய ரவீந்திரன் மிகவும் ஆவேசமாக மகனின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார்.

இதுகுறித்து கொடக்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிரசாந்த்தின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் ரகளை செய்த மகனை தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அளுத்கம சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு, உறுதிப்படுத்தினார் பொலிஸ் மாஅதிபர்
Next post கோமாவிலிருந்து மீண்டார் மைக்கல் ஷூமாக்கர்; வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறினார்..