உ.பி.யில் காதலனோடு ஓடிய பெண்ணை, சுட்டுக் கொன்று எரித்த அண்ணன்

Read Time:2 Minute, 8 Second

theeநாட்டில் நடக்கக் கூடாதது எல்லாம் நடைபெறும் காட்டுமிராண்டித் தனத்துக்கு பெயர் போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அவரது அண்ணன் சுட்டுக் கொன்று, பிணத்தையும் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலிகார் மாவட்டத்தில் உள்ள சபாப்பூர் கிராமத்தை சேர்ந்த அந்த இளம்பெண், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, அவரையே திருமணம் செய்து கொண்டு, கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தார்.

அவருடன் ஏற்பட்ட சண்டையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்த அந்த பெண்ணிடம் முன்னாள் கிராமத் தலைவரான அவரது அண்ணன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அவர், உடன் பிறந்த சகோதரி என்று கூட பாராமல் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார்.

தடயம் தெரியாமல் இருப்பதற்காக பிணத்தை அவர் எரித்த போது எழுந்த புகை மூட்டத்தை கண்டு சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்து வீட்டினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அனைவரும் தப்பியோடி விட்டிருந்தனர்.

பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்த இளம்பெண்ணின் பிணத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்லதண்ணியில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம்; 17 வயது சிறுவன் கைது
Next post கால்பந்து போட்டிக்காக, கவர்ச்சி நடனமாடி கலங்கடித்த பூனம் பாண்டே