மங்காத்தா–2ல் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சி
விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் 1995-ல் வந்தது. அதன் பிறகு ஒன்றாக நடிக்கவில்லை.
விஜய்யும், சூர்யாவும் நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் இரு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பது சகஜமாக உள்ளது. மம்முட்டியும், மோகன்லாலும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
தமிழ் படங்களில் மட்டும் அந்த நிலைமை இல்லை. ரஜினி, கமலை இணைத்து நடிக்க வைக்க பல தடவை முயற்சிகள் நடந்தும் நடக்கவில்லை. அதற்கு அடுத்தபடியாக இருக்கும் கதாநாயகர்களும் சினிமாவில் அறிமுகமான போது சேர்ந்து நடித்துவிட்டு இப்போது தனித்தனியாக பிரிந்து விட்டார்கள்.
இந்த நிலையில் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க திட்டங்கள் வகுக்கப்படுகிறது. மங்காத்தா 2–ம் பாகம் படத்தில் இருவரும் நடித்தால் பொறுத்தமாக இருக்கும் என்று கருதுகின்றனர். மங்காத்தாவில் அஜீத், அர்ஜூன் நடித்து இருந்தனர். வெங்கட் பிரபு இயக்கினார். படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. எனவே அதன் 2–ம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு தயாராகி வருகிறார்.
விஜய், அஜீத்திடம் இதில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஜெயம் ரவியை வைத்து ஆதி பகவன் படத்தை தயாரித்த ஜெ.அன்பழகன் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை எடுக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
விஜய், அஜீத் இருவரையும் சேர்த்து படம் தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன். இதுகுறித்து அவர்களிடம் பேசப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
Average Rating