கண்களால் பதிலளிக்கிறார் ஷூமாக்கர்

Read Time:1 Minute, 33 Second

58331சுமார் 6 மாதகால கோமா நிலையிலிருந்து மீண்டுள்ள, மைக்கல் ஷூமாக்கர் தனது மனைவியின் குரலுக்கு பிரதிலிப்பை காட்டுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

போர்மியூலா வன் காரோட்டத்தில் 7 முறை சம்பியனான ஜேர்மனைச் சேர்ந்த மைக்கல் ஷூமாக்கர் (45), கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி தலையில் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து பிரெஞ்சு வைத்தியாசாலையில் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த அவர், 6 மாதகாலத்தின்பின் கோமாவிலிருந்து மீண்டார்.

தற்போது சுவிட்ஸர்லாந்தின் ஷூமாக்கரின் இல்லத்துக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மைக்கல் ஷூமாக்கரினால் இன்னும் பேச முடியாத போதிலும் அவர் தனது மனைவி கொரினாவின் குரலுக்கு கண்கள் மூலம் பதிலளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசிய விமானம் பற்றிய தகவல், இன்னும் சில தினங்களில் வெளிவரும்
Next post நிர்வாண பெண்ணின் சூரிய குளியலால் நிகழ்ந்த விபரீதம் (வீடியோ)