மனைவி எதிர்த்தாலும், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய நான் தயார் -மேவின் சில்வா
சமூக நல்லிணக்கம் கருதி தனது மனைவி பிள்ளைகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய தான் தயாராக இருப்பதாக அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தக் கருத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
‘இந்த நாட்டில் இன, மத, குல வேறுபாடுகள் எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் ஓர் சம்பவம் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நான் அங்கு சென்று பார்த்தேன். உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சொத்துக்களுக்கும் சேதமேற்பட்டுள்ளது. சிங்கள, முஸ்லிம் இன மக்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் எமது இரத்த சொந்தங்கள். எனது மனைவி எதிர்ப்புத் தெரிவித்தாலும் கூட, தேச ஒற்றுமையின் நலன் கருதி ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.
இதுபற்றி எனது பிள்ளைகள் தவறாகப் பேசினாலும் எனக்குப் பிரச்சினையில்லை. அதன் பின்னர், முகத்தை முழுவதும் மறைத்துக்கொண்டுள்ள என்னுடைய முஸ்லிம் மனைவியுடன் எந்தக் கலவரத்திற்கும் என்னால் செல்ல முடியும்,’ என்றார் மேவின் சில்வா.’
Average Rating