உதயன் பத்திரிகை அலுவலகத்தில் வ.புலிகள் வெறியாட்டம்!
இன்று மாலை யாழ் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குள் புகுந்து கொண்ட வன்னிபுலிகள் இருவர் அங்கிருந்தவர்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் விற்பனை முகாமையாளரும் மற்றுமொருவருமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன். அங்கிருந்தவர்கள் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளைய தினம் சர்வதேச ஊடகவியலாளர் தினம் நடைபெறவுள்ள நிலையிலேயே இவ் ஊடகத்துறையினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதன் மூலம் இலங்கையில் பத்திரிகையாளருக்கு பாதுகாப்பு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வன்னிபுலிகள் இவ் வெறித்தனத்தை புரிந்துள்ளனர். இவ் பத்திரிகையின் நிறுவனர் வித்தியாதரன் அண்மைக்காலமாக இலங்கை அரச தலைவர் மகிந்தவுடன் உறவினை பேணிவருவதாக தெரிவித்து வன்னிபுலிகளின் கொலைகளை நியாயப்படுத்தும் நிதர்சனம் இணையம் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Average Rating