சவூதியிலிருந்து மலேஷியா நோக்கிச் சென்ற விமானத்தில் பெண் மரணம்

Read Time:1 Minute, 51 Second

air.malasiaசவூதி அரேபியாவிலிருந்து மலேஷியா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததால் அவ்விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றதாக மலேஷியாவின் பேர்னமா இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் பிளைனாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இவ்விமானம் சவூதி அரேபியாவில் உம்றா கடமைகளை நிறைவுசெய்துகொண்டு தாயகம் திரும்பும் யாத்திரிகர்கள் உட்பட சுமார் 350 ஏற்றிக்கொண்டு ஜெத்தா நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விமானம் இலங்கை வான்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது 46 வயதான ஸலேஹா சல்லாஹ் எனும் பெண் சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில், இவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இவ்விமானத்தின் ஏனைய பயணிகள் 12 மணித்தியால தாமதத்தின்பின் கோலாலம்பூரை சென்றடைந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் றேஹார் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹடூன் அஹ்மு தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்திரிகாவின் வீட்டை படம்பிடித்த மூவருக்கு விளக்கமறியல்
Next post புத்தளம் குருநாகல் வீதி விபத்தில் சிறுமி பலி