15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற காதலனுக்கு வலை வீச்சு
சிறுமி ஒருவரை அவரது பெற்றோருக்கு தெரியாது கடத்திச் சென்ற நபரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் – தெதுருஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
அப் பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்ற சிறுமி கடந்த ஆறு மாதத்திற்கு முன் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளார்.
நேற்று (26) தனது தாத்தாவின் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.
எனினும் அயல் வீட்டு இளைஞர் ஒருவர் தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தியதாகவும் அதற்கு பின்னதாகவே சிறுமி கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞனுடன் சிறுமிக்கு காதல் தொடர்பு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மற்றும் சிறுமியை தேடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating