நடன நிகழ்ச்சிக்கு நமீதா வராததால் ரசிகர்கள் கல்வீச்சு: போலீஸ் தடியடி

Read Time:2 Minute, 32 Second

namitha in sareeகாரைக்கால் நகராட்சி புதிய திடலில் நடிகை நமீதாவின் நடனத்துடன் கூடிய ‘உங்களில் யார் லாரன்ஸ்?’ என்ற நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிளாட்டினம், கோல்டு, சில்வர் என்ற தரவரிசையில் ரூ. 100 முதல் ரூ. 300 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இரவு 8 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உள்ளூரை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடினார்கள். இரவு 10 மணியளவில் மதுரை முத்துவின் மிமிக்ரி நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அவர் மேடையில் பேசும்போது, நடிகை நமீதா, உடல்நல குறைவு காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் பேனர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

மேடையை நோக்கி கற்களையும் வீசினார்கள். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அந்த வழியாக சென்ற பஸ்கள் நிறுத்தப்பட்டன. தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லேசாக தடியடி நடத்தி கலவரத்தை போலீசார் அடக்கினார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சங்கரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நமீதாவின் நடன நிகழ்ச்சி என்று கூறி பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டதாக ஒருங்கிணைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் சிலர் காரைக்கால் டவுன் போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகனங்களில் சத்தமாக பாடல் போட தடை
Next post ஆபாச வீடியோ சர்ச்சைக்சையால் அழகுராணி அந்தஸ்தை துறந்த யுவதி