நாயால் தெருச்சண்டை போட்ட, சங்கீதா தர்மசங்கடத்தில்!

Read Time:1 Minute, 44 Second

006eஉயிர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சங்கீதா.

அதன் பின்பு பல படங்களில் நடித்தாலும் இவருக்கென பெரிய படவாய்ப்புகள் அமையவில்லை. இவர் பாடகர் கிரிஷ்ஷை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்நிலையில் இவரது வீட்டுக்கு அருகே வசித்த உஷா என்ற பெண் நான்கு தெரு நாய்களை பயிற்சி கொடுத்து வருகிறாராம்.

இவர் வளர்க்கும் நாய்கள் அங்கு வசிப்பவர்களை மிகவும் கஷ்டப்படுத்துவது மட்டுமில்லாமல், வெளியே யாரையும் செல்லவிடாமல் அச்சத்தை ஏற்படுத்தியதாம்.

இந்த பிரச்சனையால் நடிகை சங்கீதாவும் பாதிக்கப்பட்டதால் குழாயடி சண்டை போல் அங்கு குடியிருப்பவர்களும், இவரும் நடுத் தெருவில் வந்து சண்டை போட்டிருக்கிறார்கள்.

இந்த பிரச்சனையால் நடிகை சங்கீதா மற்றும் அவரது கணவர் இருவரும் என்னை தரக் குறைவாக பேசினார்கள் என்றும் மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை போலீஸ் நிலையத்தில் உஷா புகார் அளித்தார்.

இது நடந்து சில நாட்களாகியும் இதைப்பற்றி வெளியில் பார்ப்பவர்கள் அனைவரும் கேட்பதால் மிகவும் தர்ம சங்கடத்தில் இருக்கிறாராம் சங்கீதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரிய சிறுமிகளின் விடுதலைக்காக, கன்னித்தன்மையை வழங்கும் பொப்பிசை பாடகி!
Next post பிச்சை எடுப்பது இனி ‘கிரிமினல் குற்றம்!’ – நோர்வே அரசு அறிவிப்பு