மலேசிய விமானம் மாயமான பிறகும் பல மணிநேரம் பறந்துள்ளது… விசாரணையாளர்கள் புதுத் தகவல்
Read Time:1 Minute, 22 Second
மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளின் உதவியுடன் கடந்த 2 மாதங்களாக விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
ஆனால், மாயமான விமானம் குறித்து இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், விமானம் மாயமான பிறகும் தொடர்ந்து மிகவும் கட்டுப்பாடான முறையில், பல மணி நேரம் செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.
Average Rating