இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகில் 30 சடலங்கள் மீட்பு
Read Time:1 Minute, 6 Second
புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றில் இருந்து 30 பேரின் சடலங்களை இத்தாலியக் கடற்படையினர் கண்டறிந்துள்ளனர்
சிசிலி மற்றும் வடஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூச்சுத் திணறலை எதிர்நோக்கியிருந்ததாக இத்தாலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த மீன்பிடிப் படகில் 600 பேர் வரை பயணித்துள்ளதுடன் அவர்களில் இருவர் கர்ப்பிணிப் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் இத்தாலியின் தென்பிராந்தியதை 60 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர் சென்றடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.
Average Rating