நண்பனுடன் கள்ளத்தொடர்பு – மனைவியை கொன்ற கணவர்!!
வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் மனைவி புல்முனியுடன் வசித்து வரும் பாப்லு மர்மர் என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு வந்தார்.
இது தொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவர் புல்முனியின் கழுத்தை நெறித்து கொன்று விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அந்த வீட்டின் உரிமையாளர் மதியம் புல்முனியின் செல்போனுக்கு பல முறை அழைப்பு விடுத்தும் வெகு நேரமாக செல்போன் எடுக்கப்படாததால் சந்தேகப்பட்ட அவர், பாபுலுவின் வீட்டுக் கதவை தட்டிப் பார்த்தார்.
கதவு திறக்கப்படாததால் அவர் அளித்த புகாரையடுத்து விரைந்து வந்த பொலிசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கழுத்து நெறித்து கொல்லப்பட்ட நிலையில் புல்முனி பிணமாக கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக இருக்கும் பாப்லுவை தேடி வருகின்றனர்.
Average Rating