திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர்!!

Read Time:2 Minute, 13 Second

b134c3ab-b403-4bb2-a940-f4c1077bfc0b_S_secvpfதிண்டுக்கல் அருகில் உள்ள செல்லமந்தாடி திருப்பதி நகரை சேர்ந்த கருப்பன் மகள் அனிதா (வயது24). வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் ரஞ்சித்குமார் (29). அனிதா பிளஸ்–2 படித்து வந்ததில் இருந்து ரஞ்சித்குமாரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் அனிதா திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே கல்லூரியில் ரஞ்சித்குமார் முதுகலை பட்டம் பயின்று வந்தார்.

இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் ரஞ்சித்குமார் திருமணம் செய்து கொள்வதாக கூறி அனிதாவை பலமுறை கற்பழித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது ரஞ்சித்குமார் தனது பெற்றோர்களான மனோகரன், அமுதா மற்றும் உறவினருடன் பெண் கேட்க சென்றார். அப்போது 70 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக தர வேண்டும் என ரஞ்சித்குமார் வீட்டார் தெரிவித்தனர்.

ஆனால் அதற்கு அனிதாவின் பெற்றோர்கள் 25 பவுன் நகை போடுவதாக தெரிவித்தனர். இதனை காரணம் காட்டியும் அனிதாவிற்கும் தனக்கும் ஜாதக பொருத்தம் இல்லை என கூறி ரஞ்சித்குமார் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.

இது குறித்து அனிதா திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்து ஏமாற்றிய ரஞ்சித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நண்பனுடன் கள்ளத்தொடர்பு – மனைவியை கொன்ற கணவர்!!
Next post களஞ்சியம் எதிர்ப்பை மீறி அஞ்சலி நடிக்கிறார்!!