புதுமுகத்துடன் ஜோடி சேர 2 கோடி கேட்கவில்லை: சமந்தா!!

Read Time:2 Minute, 12 Second

5662877a-4a5e-4c7f-a1c1-969389ae3043_S_secvpfசமந்தா தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ளார். சூர்யா ஜோடியாக அஞ்சான், விஜய் ஜோடியாக கத்தி படங்களில் நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று அவர் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளார்.

இதற்கிடையில் ‘அல்லுடு சீனு’ என்ற படத்தில் மட்டும் புதுமுக நாயகன் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். இந்த படத்தில் நடிக்க முதலில் அவர் மறுத்ததாகவும் ரூ.2 கோடி சம்பளம் தருவதாக ஆசை காட்டிய பிறகு நடிக்க சம்மதித்ததாகவும் செய்திகள் பரவின.

இதற்கு சமந்தா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

புதுமுக நாயகனுடன் ஜோடி சேர நான் ரூ.2 கோடி வாங்கியதாக வதந்தி பரவியுள்ளது. அதில் சிறிதும் உண்மை இல்லை. அந்த தொகையை வாங்கி இருந்தால் சந்தோஷம் தான். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

நான் இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்த போது தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் என்னிடம் தொடர்பு கொண்டு அல்லுடு சீனு படத்தில் நடிக்க கேட்டார். எப்போது வேண்டுமானாலும் நடித்து கொடுங்கள் என்றார். எனவே அந்த படத்தை ஒப்புக் கொண்டேன். மற்ற படங்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறேனோ அந்த தொகையை தான் இந்த படத்துக்கும் வாங்கினேன். அதிகமாக வாங்கவில்லை.

இவ்வாறு சமந்தா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களஞ்சியம் எதிர்ப்பை மீறி அஞ்சலி நடிக்கிறார்!!
Next post ஈபிள் கோபுரத்துக்கு முன்னால், உலக சாதனையாளரின் பாய்ச்சல்..