பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதால் மாணவி தற்கொலை!!

Read Time:2 Minute, 16 Second

unnamed (64)சமூக வலைதளமான பேஸ்புக்கில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதை அடுத்து கொல்கத்தாவில் 11 வகுப்பு மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கொல்கத்தாவில் பள்ளி ஒன்றில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பைசல் இமாம் கான் என்ற கல்லூரி மாணவன் பேஸ்புக்கில் நண்பராக இணைந்துள்ளனர்.

விரைவில் இருவம் மிகவும் நெருங்கிய நண்பராக மாறியுள்ளனர். பின்னர் பைசலுடனான கலந்துரையாடலை மாணவி சில காரணங்களுக்காக நிராகரித்து வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பைசல் தனது நண்பர்களுடன் இணைந்து மாணவியை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளான். பைசல் தனது நண்பர்கள் தீபக், சதீஷ் ஆகியோருடன் இணைந்து மாணவியின் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாசமான தகவல்களை பேஸ்புக்கில் பரவ விட்டுள்ளனர். மாணவியை கால் கேள் போன்று சித்தரித்து ஆபாசமாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் செல்போனுக்கு சில தகாத அழைப்புக்கள் வந்துள்ளன. இதனையடுத்து மாணவி பேஸ்புக்கை பார்த்த போது உண்மை தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மாணவியின் 6 பக்கம் தற்கொலை கடிதம் சிக்கியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் பைசல் மற்றும் அவனது நண்பர்கள் சதிஷ் மற்றும் தீபக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையை காரில் வைத்து பூட்டிவிட்டு, நைட் கிளப்பில் ஆட்டம் போட சென்ற பெண் கைது!!
Next post அலட்சியப்படுத்திய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன்!!