குழந்தையை காரில் வைத்து பூட்டிவிட்டு, நைட் கிளப்பில் ஆட்டம் போட சென்ற பெண் கைது!!

Read Time:1 Minute, 43 Second

unnamed (65)அமெரிக்காவில் 3 வயது மகனை காரில் தனியாக விட்டுவிட்டு நைட் கிளப்பில் ஆட்டம் போடச் சென்ற தெற்காசியாவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹாரிஸ் கவுன்ட்டியைச் சேர்ந்தவர் அஸ்மா ஷேக்(24). அவர் அப்பகுதியில் உள்ள நைட் கிளப்புக்கு தனது 3 வயது மகனுடன் காரில் சென்றார்.

காரில் இருந்து இறங்கிய அஸ்மா மகனுடன் கிளப்புக்குள் நுழைய முயன்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் குழந்தையுடன் கிளப்புக்குள் செல்லக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து சென்ற அஸ்மா சிறிது நேரத்தில் தனியாக வந்தார். குழந்தையை தனது தோழியிடம் விட்டுவிட்டு வந்ததாக போலீஸ்காரரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் பேச்சை நம்பாத போலீஸ்காரர் அஸ்மாவின் காருக்கு சென்று பார்த்தால் அதற்குள் குழந்தை தனியாக இருந்தது. இதையடுத்து குழந்தையை தனியாக விட்டுவிட்டு வந்த அஸ்மாவை அவர் கைது செய்தார். பின்னர் அஸ்மா ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்!!
Next post பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதால் மாணவி தற்கொலை!!