பிணங்களுடன் பாலியல் உறவு வைத்திருந்த பிரபலம் – அதிர்ச்சித் தகவல்!!
இங்கிலாந்தைச் சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜிம்மி சேவில்.
ஒரு தனியார் வானொளியில் நிகழ்ச்சி வர்ணனையாளராகவும் இருந்தார்.
84 வயதான இவர் கடந்த 2011–ம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு குழந்தைகளிடம் ‘பாலியல்’ உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அது குறித்த விசாரணையை இங்கிலாந்து பொலிசார் மேற்கொண்டனர். அப்போது நாடு முழுவதும் உள்ள 28 தேசிய சுகாதார சேவை மைய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது குழந்தைகள் முதல் 75 வயது வரையிலான முதியவர்களுடன் பாலியல் உறவு வைத்து இருந்தது தெரிய வந்தது.
கடந்த 40 ஆண்டுகளாக இதை செய்து வந்ததாக விசாரணையின்போது அவர் தெரிவித்தார். ஆனால் விசாரணை நடந்த போதே அவர் மரணம் அடைந்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது அவர் பிணங்களுடனும் ‘பாலியல்’ உறவு வைத்து இருந்த தகவல் வெளியாகி உள்ளது. வைத்தியசாலைப் பிணவறைகளில் பரிசோதனைக்காக வைத்திருந்த பிணங்களுடன் அவர் பாலியல் லீலையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகவலை அந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். இதற்காக சுகாதார துறையின் செயலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Average Rating