எந்த விஷயத்திலும் முதல் இடத்தை பெற வேண்டும்!!
நடிப்பில் மட்டுமின்றி, தன்னுடைய அழகாலும் எல்லோரையும் கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் திரைக்கு வந்த ’அட்டகத்தி’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்களில் நடித்து பிரசித்தி பெற்றார். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அட்டகத்தி தினேசுக்கு ஜோடியாக ‘திருடன் போலீஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
படத்துக்கு படம் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதே எனக்கு பிடிக்கும். அந்த வகையில் நான் நடித்து, விரைவில் வெளிவர இருக்கும் ´திருடன் போலீஸ்´ திரைப்படம் என் வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும். இயக்குனர் கார்த்திக் நம்மை நோகடிக்காமல் நம்மிடம் இருந்து வேலை வாங்குவதில் வல்லவர். அந்த வகையில் என்னையும், தினேஷையும் சிரிக்க வைத்தே வேலை வாங்கி விட்டார்.
படத்தின் டீஸர் எங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது, படம் முழுக்க மிகவும் யதார்த்தமான நகைச்சுவை கலந்த ஒரு வித்தியாசமான கலவை இருக்கும். தேசிய விருது மட்டுமின்றி தமிழ் திரை உலகில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்த எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமை என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, எந்த விஷயமானாலும் சரி, அதில் முதன்மையான இடத்தை பெற வேண்டும் என நினைப்பவள் நான். அந்த எண்ணமும் எனக்கு மிகவும் பிடித்தமான நந்திதா தாஸ், கஜோல் ஆகியோரின் பாதிப்பும் என்னை உயர்ந்த இடத்துக்கு கூட்டி செல்லும் என்று மிகுந்த நம்பிக்கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
Average Rating