கணவரை விவாகரத்து செய்வதாக ரம்பா பற்றி வதந்திகள்: குஷ்பு கண்டனம்!!

Read Time:2 Minute, 6 Second

072e3af4-f7cd-41c3-9e40-75f768533365_S_secvpfரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திர பத்மநாதனுக்கும் 2010–ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தைக்கு சம்பா என பெயரிட்டுள்ளனர்.

ரம்பா தற்போது கனடாவில் கணவருடன் வசித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையும் அவர் நிறுத்தி விட்டார்.

கணவருடன் ரம்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின.

இதையடுத்து மீண்டும் ரம்பா சினிமாவில் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் குஷ்பு சில தினங்களுக்கு முன் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட கனடா சென்று இருந்தார். நயாகரா நீர் வீழ்ச்சியை அவர்கள் சுற்றி பார்த்தனர்.

குஷ்பு கனடா வந்துள்ள தகவல் ரம்பாவுக்கு தெரிய வர நேரில் போய் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். விருந்து கொடுத்தார். தனது குழந்தையுடன் குஷ்புவுடன் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

இந்த படத்தை குஷ்பு தனது டுவிட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது:–

கனடாவில் ரம்பா வீட்டுக்கு சென்றேன். அங்கு ரம்பாவும் அவரது கணவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கருத்து வேறுபாடு என்றும் பிரியப்போகிறார்கள் என்றும் செய்தி பரப்புவது ரொம்ப தவறு இது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் ஜோடியாக விடுமுறை கொண்டாட்டம்: திரிஷா–ராணா காதல் தீவிரம்!!
Next post உலகின் கவர்ச்சியான பெண்ணாக தீபிகா படுகோன் தேர்வு!!