யுவதி மீது பாலியல் வல்லுறவு;காதலன் உட்பட ஆறு பேர் கைது!!

Read Time:2 Minute, 9 Second

3517 வய­து­டைய தனது காத­லியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் யுவதியின் காதலன் உள்­ளிட்ட ஆறு பேர் கைதுசெய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர்.

முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட உடப்பு பகு­தியைச் சேர்ந்த யுவதியே இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த யுவதி உடப்பு பகு­தியில் முடி வெட்டும் நிலையம் ஒன்றில் பணி புரியும் இளைஞர் ஒரு­வ­ருடன் காதல் தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் குறித்த யுவதி கடந்த ஒரு மாதத்­திற்கு முன்னர் தனது காத­லனைச் சந்­திப்­ப­தற்­காக அவர் பணி­பு­ரியும் இடத்­திற்கு சென்­றுள்ளார்.

இதன் போதே அங்­கி­ருந்த தனது காதலன் உள்­ளிட்ட ஆறு பேர் தன்னை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­ய­தாக அந்த யுவதி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார். இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ ந­பர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள போதிலும் அவர்கள் பிர­தே­சத்தை விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

பாதிக்­கப்­பட்ட யுவதி வைத்­திய பரி­சோ­த­னைக்­காக சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாசக்காட்சிகளைக் காண்பித்து மாணவிகளை வல்லுறவுக்குட்படுத்திய அதிபர் கைது!!
Next post சிறுவர் துஷ்பிரயோகமா? 1929 ஐ அழுத்தவும்!!