சிறுவர் துஷ்பிரயோகமா? 1929 ஐ அழுத்தவும்!!
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்,திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுமாயின் அவை தொடர்பில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை அழுத்தி முறையிடலாம்.
இந்த தொலைபேசி இலக்கத்துடன் 24 மணித்தியாலயமும் தொடர்புகொண்டு முறையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் உலக தரிசத்தின் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் இதற்கான விழிப்புணர்வு பலகை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு பலகை, பொத்துவில் மத்திய சந்தைக்கு முன்பாகவும் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாகவும் நிறுவப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததன் பின்னர், பொது மக்கள் பாடசாலை மாணவர்களுக்கு இந்த அவசர முறைப்பாட்டு தொலைபேசி அழைப்பு இலக்கம் சம்மந்தமாக விளக்கமளிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட உளநல சமூக அதிகாரி அஷாருதீன், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி தம்பிக்க குலதுங்க திருக்கோவில், பொத்துவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கணக்காளர் உலக தரிசத்தின் நிறுவனத்தின் திருக்கோவில் பொத்துவில் முகாமையாளர் இந்து ரோகாஸ் குமாரசாமி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் விழிப்புணர்வு கருத்துக்கள் முன்வைத்தனர்.
Average Rating