முன்னாள் காதலியின் காதலன் காதை கடித்த துப்பிய நியூ. வாழ் இந்தியருக்கு ஜெயில்!!

Read Time:2 Minute, 5 Second

fad19fae-a2e0-4e03-ab5f-c2e73517eea9_S_secvpfநியூசிலாந்தில் வாழ்ந்து வரும் இந்தியர் அனிஷ் ராவ், தனது முன்னாள் காதலியின் காதலன் காதை கடித்து துப்பிய காரணத்திற்காக ஜெயில் தண்டனை பெற்றுள்ளார்.

நியூசிலாந்து வாழ் இந்தியர் அனிஷ் ராவ் (வயது 28). இவரது காதலி விகாஷ் அன்சாரி. இவர்கள் கடந்த வருடம் பிரிந்துவிட்டனர். பின்னர், அன்சாரி, ரித்தேஷ் ராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

காதலி தன்னை விட்டு பிரிந்து மற்றொருவரை திருமணம் செய்து கொண்டது அனிஷூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே சூப்பர் ஆக்லாந்தின் நியூலைனில் உள்ள அன்சாரிக்கு வீட்டிற்குச் சென்றார். வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அனிஷூக்கு முன்னாள் காதலி, தன் கணவருடன் இருந்ததை கண்டு ஆத்திரமடைந்தார்.

உடனே அனிஷ், ராமை கடுமையாக தாக்கினார். அத்துடன் அவரது காதையும் கடித்து துப்பினார். அதோடு மட்டுமல்லாமல் அன்சாரியையும் கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ராம் துண்டிக்கப்பட்ட தன் காதுடன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். ஆனால் டாக்டர்கள் காதை ஒட்டவைக்கமுடியாது என்று கூறிவிட்டனர்.

இந்த சம்பவம் கடந்த வருடம் நடைபெற்றது. இதன் விசாரணை நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது கொடூரமான செயல் என்று கூறி 27 மாதம் ஜெயில் தண்டனையும் 430 டாலர் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS, VIDEO) காதலியை திருமணம் செய்து சில மணிநேரங்களில் உயிரிழந்த காதலன்!!
Next post ஆத்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி கற்பழித்த காமக்கொடூரன்!!