ஆத்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி கற்பழித்த காமக்கொடூரன்!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி 8–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் திவ்யா(வயது 19) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், அவரது தங்கை லதா, அவரது சித்தப்பா மகன் ஸ்ரீதரன் ஆகியோர் பின்னால் சென்று திவ்யாவை தாக்கி அருகில் உள்ள மறைவான இடத்திற்கு கொண்டு சென்றனர். அந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும்.
அங்கு வைத்து அவரது கால்களையும், கைகளையும் ரமேஷ், ஸ்ரீதரன், லதா ஆகியோர் இறுக்கமாக பிடித்துக்கொண்டு சத்தம் போடாமல் இருக்கும் வகையில் அவரது வாயையும் பொத்தினார்கள். எனினும் திவ்யா சத்தம் போட்டார். அப்போது 3 பேரும் சேர்ந்து அவரது தலையை பலமாக கல்லால் தாக்கினார்கள். இதில் திவ்யா ரத்தவெள்ளத்தில் மயக்கம் அடைந்தார்.
அப்போது திவ்யா இறந்து விட்டதாக நினைத்து பயத்தில் ஸ்ரீதரனும், லதாவும் அங்கிருந்து ஓடி விட்டனர். ஆனால் ரமேஷ் அங்கேயே நின்றிருந்தான்.
உயிருக்கு போராடியவாறு மயங்கிய நிலையில் கிடந்த திவ்யாவை விடாமல் அவன் ஈவு இரக்கமின்றி கற்பழித்தான். இதனால் திவ்யாவுக்கு ஜன்னி வந்தது. உடனே ரமேஷ் அங்கிருந்து ஓடி விட்டான்.
இரவு 8 மணியான பின்பும் திவ்யா வீட்டுக்கு வராததால் பதற்றம் அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடி பார்த்தனர். அங்கு அவர் இல்லாததால் வீட்டின் அருகே உள்ள முள்வேலிகள் நிறைந்த இடத்தில் தேடினார்கள்.
அங்கு ஜன்னி வந்து மயங்கிய நிலையில் திவ்யா அலங்கோலமாக கிடந்தார். பதறிபோன பெற்றோர் கதறி அழுதவாறு மகளை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மயக்கம் தெளிந்த பின் தனக்கு நேர்ந்த கொடூரங்களை பெற்றோரிடம் கூறி திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இது குறித்து மல்லியகரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேஷ், ஸ்ரீதரன், லதா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
ரமேஷ் என்பவன் 2 பெண்களை திருமணம் செய்து கொண்டவன். அவனது சித்ரவதை மற்றும் நடத்தை சரியில்லாததால் முதல் மனைவி அவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டு வேறு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
அண்ணன் கற்பழிப்பதற்கு தங்கை உடந்தையாக இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating