வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது!!
Read Time:56 Second
பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ரஞ்சிதா(வயது 21). இவர்களுக்கு கடந்த 2012–ம்ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் மேலும் 15 பவுன் நகையும், ரூ.3 லட்சம் பணமும் வாங்கி வருமாறு சக்கரவர்த்தி மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். இல்லையென்றால் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்தார். இதற்கு அவரது தாய் சுமதி, தம்பி தமிழ்செல்வன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து ரஞ்சிதா ஆயக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்தனர்.
Average Rating