பழனியில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்: நண்பர் மீது தாக்குதல்!!
பழனி சத்யா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் காளியம்மாள்(வயது 17). அங்குள்ள ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். அங்கு வேலைபார்க்கும் தங்கபாண்டியன் என்ற வாலிபருடன் காளியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற காளியம்மாள் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அங்கு சென்று விசாரித்தபோது காளியம்மாளை காதலன் தங்கபாண்டியன் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காளியம்மாளின் தந்தை பழனிச்சாமி டவுன் போலீசில் புகார் செய்தார். அவரது மகன் அண்ணாமலை உறவினர் மாரியம்மாள் ஆகியோர் தங்கபாண்டியனின் நண்பர் மாரிமுத்து வீட்டிற்கு சென்று காளியம்மாளை தங்கபாண்டியன் கடத்தி செல்ல நீ தான் உதவி செய்துள்ளாய் என்று சத்தம் போட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் மாரி முத்துவும், அண்ணாமலையும் ஒருவரை யொருவர் தாக்கினர். காயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து 2 பேரும் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating